Home உலகம் 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறக்கப்படுகிறது

9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறக்கப்படுகிறது

by admin

ஹொங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்லும் வகையில் 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது . நீண்ட இடைவெளிக்கு பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 24-ம் திகதி குறித்த பாலம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தினால் சீனா மற்றும் ஹொங்கொங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் பிற்போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தறிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More