Home இந்தியா ராகுல் காந்தி கைது

ராகுல் காந்தி கைது

by admin


சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டம் அடைந்ததனையடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் கட்;டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தனர்.

ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுமறையில் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திவரும் காங்கிரஸ் அதனைக் கண்டித்து கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது.

இந்தநிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி இறுதியில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.  இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More