Home சினிமா விக்ராந்திற்கு படத்தை கொடுத்து அதற்கு திரைக்கதை வசனமும் எழுதிய விஜய்சேதுபதி

விக்ராந்திற்கு படத்தை கொடுத்து அதற்கு திரைக்கதை வசனமும் எழுதிய விஜய்சேதுபதி

by admin


விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெறுவதற்காக பல்வேறு  திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை சஞ்ஜீவ் இயக்குகிறார்.

2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கிய பின்னர், சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னதும் அக் கதையை கேட்டு பாராட்டினார் விஜய் சேதுபதி.

இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு தான் வசனம் எழுதவா…? என கேட்டாராம் விஜய் சேதுபதி. அவர் உள்ள வேலைப்பளுவின் மத்தியில் அது எப்படி சாத்தியம்? என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் சஞ்ஜீவ்.

சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும் என்றும் கூறினார் சஞ்ஜீவ்.

அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் திரைக்கதை, வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை. விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம் என்று மேலும் கூறினார் இயக்குனர் சஞ்ஜீவ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More