Home இந்தியா மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு

by admin

மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள.

அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை குறித்து கைத்தொலைபேசியில் ; வீடியோவாக பதிவு செய்து, உறவினர்களுக்கு அனுப்புpயிருந்தனர். இந்த காட்சிகள், மலேசியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டதனையடுத்து மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் முருகேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது முயற்சியால் 48 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More