Home இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை…

தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை…

by admin

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான பலம் தங்களிடம் உள்ளது எனவும் போதியளவு ஆதரவு உள்ளது என தெரிந்த பின்னரே தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத’ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 14ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரiணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளமாட்டோம் எனவும் தேவைப்பட்டால் தங்கள் பலத்தை நிரூபிக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெளிவாக தெரிவித்துள்ளார் எனவும் யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்கள் கட்சி தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை வழங்கியது எனவும் ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தின் பக்கம் சாய்ந்துகொண்டு இலங்கையின் நலனிற்கு பாதிப்பை ஏற்படுத்தினார் எனவும் நாமல் ராஜபக்ச குற்றம்சுமத்தியுள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட தாங்கள் தயாராகவுள்ள போதிலும் துரதிஸ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More