Home இலங்கை ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையை கண்காணிக்கும் என்கிறார் பர்ஹான் ஹக்கீம்…

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையை கண்காணிக்கும் என்கிறார் பர்ஹான் ஹக்கீம்…

by admin

இலங்கை தொடர்டபில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் இலங்கையில் அரசியலமைப்பிற்கு ஏற்பவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உறுதியாக நம்புவதாகவும் இதனால் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் எந்நேரமும் அவதானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More