Home இலங்கை பாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை

பாராளுமன்று இன்று கூடவுள்ள நிலையில் மகிந்த – ரணில் வருகை – மைத்திரி வரவில்லை

by admin

இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் சபை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு பாராளுமன்ற அமர்வுகளை அவதானிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி அகிய கட்சிகளுக்கு ஆகிய கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் பாராளுமன்றப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு வருகைதரவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் என இன்று காலை நடைபெற்ற சபாநாயகர் தலைமையிலான அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More