Home இலங்கைஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..

by admin

 

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆரம்பமானது. குறித்த மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் காரணமான இந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து காவற்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று  நடத்தப்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More