Home இலங்கை “வெள்ளை வான் கடத்தல்காரர்களை பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை”

“வெள்ளை வான் கடத்தல்காரர்களை பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை”

by admin

முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள், உங்கள் முப்படைகளின் பிரதானியை பாதுகாப்பதற்காகவோ அல்லது வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை  பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் சிறிசேனவிற்கு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது எனக்கும் தெரியாது உங்களிற்கும் தெரியாது, நீங்கள் இடமாற்றுவதற்கு முன்னர்  நிசாந்த சில்வா மேற்கொண்ட ஓய்வற்ற குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் இதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னை பொறுத்தவரை ஒரு சாட்சி என்ற அடிப்படையில் கேள்விகளிற்கு உண்மையான முழுமையான பதிலை வழங்குவது முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களை பொறுத்தவரை தனிப்பட்ட உறவுகள்  அரசியல் தேவைகள் உங்கள் மனவிருப்பங்களை வி;ட சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமானது எனகுறிப்பிட்டுள்ள அகிம்சா  உங்களை பொறுத்தவரை  விசாரணையாளர்களிற்கு வளங்களை  வழங்குவது அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவதும்  முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இவற்றிற்கு அப்பால்; நிசாந்த சில்வா போன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதன் மூலம் உரிய மரியாதை கிடைக்கும் தண்டனை கிடைக்காது என்பதை நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு  தெளிவுபடுத்துவது உங்கள் பணியாகுமஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு இலங்கையின் குற்றவியல் விசாரணை பிரிவினர் மற்றும் சுயாதீன அமைப்புகளான தேசிய பொலிஸ் ஆணைக்குழு அரசமைப்பு பேரவை மீது முழு நம்பிக்கையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் உங்களை வெளிப்படையான அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட அனுமதிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.

எனது தந்தைக்கும் பாதிக்கப்பட்ட ஏனையவர்களிற்கும் நீதி கிடைப்பதை தடுக்க முயன்று அதற்கு குறுக்கே நின்றீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் தோல்வியடைவீர்கள் என அவர் சிறிசேனவிற்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More