Home இலங்கை அரச செயற்பாடுகள் அனைத்தும், முற்றாக முடங்கும் சாத்தியம்

அரச செயற்பாடுகள் அனைத்தும், முற்றாக முடங்கும் சாத்தியம்

by admin


நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளினால் இலங்கையால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களைச் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக ஆராயும் மூடீஸ் நிறுவனம் இலங்கையின் கடன் தரப்படுத்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்தின் பின்னணியிலேயே, அக்கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி, நாட்டை, பொருளாதாரப் படுகுழிக்குள் தள்ளும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் குறிப்பாக, எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி, 1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மதிப்பிலான இறையாண்மைப் பிணைமுறியொன்று முதிர்ச்சியடைகின்ற நிலையில், தற்போதைய நெருக்கடி நீண்டு செல்லுமாயின், அக்கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்படாலாமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அடுத்த சில வாரங்களுக்குள், வரவு – செலவுத் திட்டத்தினை தாங்கள் அங்கிகரிக்காவிட்டால், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அரசாங்கத்தால் எந்தவிதப் பணத்தையும் செலவிட முடியாமல் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாதம் 5ஆம் திகதி, வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க தாம் எதிர்பார்த்திருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களினால் அது சாத்தியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவுசெலவுத்திட்டத்தினை அங்கிகரிக்கப்படாவிட்டால், அரச துறையினருக்குச் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட, மக்கள் பணத்தை முகாமைத்துவம் செய்யும் அரச செயற்பாடுகள் அனைத்தும், முற்றாக முடங்கும் எனவும் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More