Home உலகம் குவாத்தமாலாவில் 171 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை

குவாத்தமாலாவில் 171 பேரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை

by admin

குவாத்தமாலாவில் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு கிராமத்தில் 171 பேர் கொன்று குவித்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதித் அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டில் அந்நாட்டின் சர்வாதிகாரியான எப்ரெயின் ரியாஸ் மன்ட் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது எக்ஸில் மாயா என்ற இனத்தவர்களை கொன்று குவிக்க எப்ரெயின் ரியாஸ் மன்ட் உத்தரவிட்டார்.

1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாஸ் எரிஸ் எனும் நகரில் கொரில்லாக்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்ததாக தகவல் கிடைத்ததனையடுத்து அங்கு ராணுவத்தினர் சென்ற போது .சில நாட்களுக்கு முன் 19 ராணுவத்தினரைக் கொன்ற கெரில்லாக்கள் அவர்களின் ஆயுதங்களைக் கொரில்லா படையினர் எடுத்துச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து கொரில்லாக்கள் தொடர்பான விவரத்தை டாஸ் எரிஸ் நகர மக்கள் வெளியிடாத காரணத்தால் வீடுகளில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரையும் வெளியே இழுத்து வந்து ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்தனர்.  மேலும் கொலை செய்வதற்கு முன் பெண்களையும், சிறுமிகளையும் பலாத்காரம் செய்துள்ளனர்.. இந்தச் சம்பவத்தில் 201 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மன்ட் மீது இனப்படுகொலை குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில் கடந்த ஆண்டு அவர் உயிரிழந்திருந்தார். 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போரில் குவாத்தமாலாவில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் கடந்த 1996-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமானவராக தெரிவிக்கப்படும் முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ் என்பவர் 171 பேரைக் கொலை செய்ததாக தெரிவித்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் முடிந்த பின் அமெரிக்காவில் பதுங்கி இருந்த சான்டோ லோபஸ் கைது செய்யப்பட்டு குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர் மீது வழக்கு நடந்து வந்தது.

இந்தநிலையில் அதில், 171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸுக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5 ஆயிரத்து 130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குவாத்தமாலா நாட்டு சட்டப்படி அதிகபட்சமாக ஒருவருக்கு 50 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், முதல் முறையாக மிகப்பெரிய அளவில் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More