Home இலங்கை1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி புஸ்ஸல்லாவ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி புஸ்ஸல்லாவ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

by admin

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று (25.11.2018) புஸ்ஸல்லாவ நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது

புஸ்ஸல்லாவ பிரதேசத்தை மையபடுத்திய எழுச்சிமிகு இளைஞர் குழு ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்பாட்டத்தில் 1000 க்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள்¸ ஆசிரியர்கள்¸ அதிபர்கள்¸ தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள் புஸ்ஸல்லாவ நகர சபை மண்டபத்தின்; அருகில் ஆரம்பமான இந்த பேரனி நகர் வழியாக மெல்போட் தோட்;டத்தை சென்றடைந்து கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

எந்த அரசியல் தொழிற்சங்க கலப்படம் இல்லாமல் இளைஞர்கள் தாமாகவே இந்த ஆர்பாட்ட பேரணியை நடத்தினர். தங்கள் பெற்றோர்களின் சம்பள அதிகரிப்புக்கு அழுத்தம் கொடுக்கும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வேண்டும் வேண்டும் 1000.00 ரூபா வேண்டும்¸ அடிப்படை சம்பளத்தை ஆயிரம் வேண்டும்¸ ஏமாற்றாதே ஏமாற்றாதே தொழிலாளர்கனை ஏமாற்றாதே¸ அழுத்தம் கொடு அழுத்தம் கொடு கம்பனிக்கு அழுத்தம் கொடு¸ அடிக்காதே அடிக்காதே தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே¸ சுரண்டாதே சுரண்;டாதே தொழிலாளர் உழைப்பை சுரண்டாதே போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம்¸ பெற்றுக் கொடு பெற்றுக் கொடு ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொடு¸ ஒன்று சேர்வோம் ஒன்று சேர்வோம் உலக தொழிலாளர்களே ஒன்று சேர்வோம். என்ற கோசங்கள் எழுப்பட்டன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More