Home இலங்கை சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளார்

சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளார்

by admin

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  மகரகமவில் தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு சமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அங்கு உரையாற்றிய அமைச்சர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம் பெற்றுவருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவித்துள்ளனர் எனவும் அவர்களின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும் சுசில் பிரேம ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More