Home இலங்கை யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் , திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் , சுவாச பைக்குள் உணவு பாதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More