Home இலங்கை உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை

உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை

by admin


உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தெரிவித்துள்ளார். ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தானே தீர்மானிக்கவேண்டும் எனவும் தனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்போதே இனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அதற்காக காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்..

கடந்த ஒரு மாதகாலமாக மணித்தியாலத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்கின்றது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இன்னும் ஒரு வருட காலத்தில் என்னநடக்கும் என யாரும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More