Home இலங்கை சாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு

சாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் நீர் வான் பாயும் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த என். டிலக்சன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இன்று(09) மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்து. இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.

இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக்கொடிண்டிருந்தனர். இதன் போது யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஜந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More