Home உலகம் ஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு

ஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு

by admin


சரக்கு வாகன சாரதிகளிடமிருந்து பொருளை ஏற்றி, இறக்குவதற்கு லஞ்சம் பெற்ற இரண்டு சீன குடியேறிகள் மீது சிங்கப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய சரக்கு வாகனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி, இறக்க பயன்படுத்தப்படும் வாகனங்களின் சாரதிகள் தங்களது பணியை தாமதமின்றி செய்வதற்தாக பலமுறை ஒரு டொலர், பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

47 வயதாகும் சென் ஜிலியாங், 43 வயதாகும் ஜாவோ யுகன் ஆகிய சீன குடியேறிகளின் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 53 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

உலகின் மிகக் குறைவான ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் கருதப்படுகிறது. ஊழலற்ற நாடு என்ற பெயரை தக்க வைத்துகொள்வதற்காக லஞ்ச முறைப்பாடுகள் தொடர்பில் சிங்கப்பூரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பு 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள உலகின் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் ஆறாவது இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More