Home இலங்கைவடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.வடமராட்சி பகுதியில் முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் வடக்கை சேர்ந்த வைரமுத்து இராசரத்தினம் (வயது 50) என்பவரே உயிரிழந்தவராவர்.

விபத்தில் உயிரிழந்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு மாலு சந்தியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , முச்சக்கர வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு மந்திகை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More