Home இலங்கை தேசிய கொடியினை கட்டிக் குளித்தவர் – பாராளுமன்றத்தில் நடக்காததா நடந்து விட்டது

தேசிய கொடியினை கட்டிக் குளித்தவர் – பாராளுமன்றத்தில் நடக்காததா நடந்து விட்டது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த  ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது,

நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். அவர் கூறியது ‘இது என்னா துணிதானே’ பாராளுமன்றத்தில் நடக்காததா நடந்து விட்டது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

சரி அய்யா தேசிய கொடியின் மகிமை தெரியுமா என்று கேட்டேன் தெரியாது என்றார். பின் இலங்கை தேசிய கொடியைப்பற்றி விபரமாக கூறினேன். தம்பி மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தெரியாமல் செய்து விட்டேன். எனக்கு இப்போது 65 வயது இது வரைக்கும் எனக்கு தெரியாது இனிமேல் இலங்கை தேசிய கொடிக்கு எனது முழுமையான மறியாதை கிடைக்கும் இதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கின்றேன் என்றார்.

அப்படி என்றால் இது வரை காலமும் இவருக்கு தேசிய கொடிபற்றி தெரியாமல் இருப்பதற்கு யார் காரணம். பிரகு அவரிடம் இருந்து அந்த தேசிய கொடி என்னால் பெற்றுக் கொள்ளபட்டு பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளது. அவருக்கு உடுத்த வேட்டி ஒன்றும் வழங்கப்பட்டது. அவர் மிகவும் சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு சென்றார். என பதிவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More