Home இலங்கை காணாமல் போன மாட்டினை தேடிச்சென்றவர் யானை தாக்கி மரணம்

காணாமல் போன மாட்டினை தேடிச்சென்றவர் யானை தாக்கி மரணம்

by admin


காணாமல் போன மாடு ஒன்றினை தேடிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து மேகராஜா என்பவராவார்.

மரணமடைந்த நபர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளதுடன் நேற்று(17) மாலை தனது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளை மங்களஹம காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திவுளானை காட்டுப்பகுதியில் துயரச்சம்பவம் இடம்பெற்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் மங்களஹம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More