Home இலங்கை மகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை

மகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை

by admin

மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும்  அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய சம்பந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழரசுக் கட்சியைவிட கூடுதலான  பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் சுதந்திர முன்னணி இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்றும் அதன் தலைவரே அரச தலைவர், அவர்கள் அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுத்நதிர முன்னணியின் சின்னத்தின் கீழேயே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இருக்கையில் எவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க முடியும் என்றும் இது பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன் சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை என்றும் இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, புதிய அரசியலமைப்பை நாடுவதாகவும் அதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளும் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளும் தீர்வு காணப்படும் என்றும் அத்துடன், அரசியலமைப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More