Home இலங்கை உறவினர்களால் கைவிடப்பட்டு, கதறி அழுத முதியவர் கைதடியில் இணைக்கப்பட்டார்…

உறவினர்களால் கைவிடப்பட்டு, கதறி அழுத முதியவர் கைதடியில் இணைக்கப்பட்டார்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

உறவினர்கள் கைவிட்டு விட்டார்கள் என கைதடி முதியோர் இல்லம் முன்பாக நின்று கதறியழுத முதியவரை நேற்றைய தினம் முதியோர் இல்லத்தினர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர்.  வட்டுக்கோட்டையை சேர்ந்த 85 வயதுடைய  சபாபதிப்பிள்ளை இராஜகோபால்  என்பவரே அவ்வாறு முதியோர் இல்லத்தில் இணைந்துள்ளார்.

கடந்த ஏழு வருட காலமாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் வசித்து வந்ததாகவும் , தற்போது உடல் நல குறைவு ஏற்பட்டு உள்ளமையால் தொடர்ந்து தனிமையில் வசிக்க முடியாத காரணத்தால் இங்கு வந்ததாக முதியவர் தெரிவித்து உள்ளார்.

அதேவேளை முதியவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இல்லத்தில் இணைத்துக்கொண்டதாகவும், அவரது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வசதியாக அவரின் உறவினர்களை இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இல்லத்தின் அத்தியட்சகர் த . கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More