Home இலங்கை மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை

மக்களுக்கான உதவிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

ஆனால் குறித்த உதவிகள் பெருமளவுக்கு நகருக்கு அண்மையாக அமைந்துள்ள நலன்புரி நிலையங்களுக்கே அதிகம் சென்றடைகிறது. மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள இடங்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை.

உதவிகளை வழங்குகின்ற தரப்புக்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று அதற்கமைவாக உதவிகளை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உதவிகள் மேற்கொள்கின்றவர்கள் அனைவரும் ஒரே வகையான உதவிகள் வழங்குவதனை தவிர்க்கும் வகையிலும் மக்களின் தேவைகளை கருத்தில் எடுத்து எல்லா மக்களுக்கும் உதவிகள் சென்றடைவதனை நோக்காக கொண்டும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் ஊடாக தொடர்புகளை கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More