Home உலகம் பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

by admin


பிலிப்பைன்சின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக முதலில் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவித்துள்ளது.

ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை அண்மித்துள்ள பசுபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More