Home இந்தியா ஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது காந்திய வழியில் ரஜனியுடன் இணைந்து பணியாற்றுவேன்….

ஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது காந்திய வழியில் ரஜனியுடன் இணைந்து பணியாற்றுவேன்….

by admin


ஆன்மீகம் சார்ந்த அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்தார். அத்துடன், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தும் வகையில் திருச்சியில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாநாடு நடத்தியிருந்தார். தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள குறிப்பில், “காந்தியம் முன்னெடுக்கும் அரசியல் என்பது ஆன்மீக அரசியலே. ஆன்மீகம் என்பது வேறு. மதம் என்பது வேறு . மதம்சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால் ஆன்மீகம் அரசியலைவிட்டு வேறுபட்டு நிற்கிறது.

உலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால் அரவணைத்துக் கொள்வது தான் ஆன்மீகம். அந்த ஆன்மீகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். ஆன்மீக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது.

ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த், காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்று தான் பொருள். எனவே காந்திய வழியில் அவருடன் இணைந்து அரசியல் பணியாற்ற விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More