Home இந்தியா ஊடக நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடரப் போவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவிப்பு

ஊடக நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடரப் போவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவிப்பு

by admin

தன் பெயர் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள ஊடக நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடரப் போவதாக பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு பாடகரான ஸ்ரீனிவாஸ் என்பவர் பெண் அஙிவிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அந்த செய்தியை வெளியிட்ட ஊடகம் ஒன்று தமிழ்ப் பாடகர் ஸ்ரீனிவாஸின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே கோபமடைந்துள்ள தமிழ்ப் பாடகர் ஸ்ரீனிவாஸ் குறித்த ஊடக நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடகர் பி.பி ஸ்ரீனிவாஸ் இறந்தபோதும் சில ஊடகங்கள் தன் பயோடேட்டாவுடன் இரங்கல் செய்தி வெளியிட்டதாகவும் தற்போது ஹைதராபாத்தில் யாரோ ஒரு பாடகர் ஸ்ரீனிவாஸ் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதற்கும் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நிறுவனம் தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More