Home இலங்கை யாழ். இந்துக் கல்லூரியின் தற்போதைய அதிபர் நியமனம் முரணானது – இலங்கை ஆசிரியர் சங்கம்:-

யாழ். இந்துக் கல்லூரியின் தற்போதைய அதிபர் நியமனம் முரணானது – இலங்கை ஆசிரியர் சங்கம்:-

by admin

இலங்கை ஆசிரியர் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு குறித்து, பாடசாலையோ, பழையமாணவர் சங்கமோ, பாடசாலை அதிபர்களோ தமது பக்க கருத்தை அனுப்பி வைக்குமிடத்து முழுமையாக பிரசுரிக்கப்படும்…

ஆர்..

யாழ். இந்துக் கல்லூரியில் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும். இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தற்போது பதில் அதிபராக நியமிக்கப்பட்டவருக்கு – பல தடவைகள் இடமாற்றங்கள் வந்த போதிலும் – கல்வியமைச்சின் உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் – அரசியல் தலையீடுகள் மூலம் தொடர்ந்தும் யாழ். இந்துக் கல்லூரியிலேயே பணியாற்றியிருந்தார்.

யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் ஓய்வு பெற்றதன் பின்னர் – தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர், இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய நியமிக்கப்படவில்லை. இவர் – தான் நீண்ட காலம் இப்பாடசாலையில் சேவையாற்றிய ஒருவர் எனக் காரணம் காட்டியுள்ள போதிலும் – 2016 சுற்றுநிருப இலக்கம் 18/2015 நிபந்தனைகளுக்கு அமைய 2016.01.05 முதல் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆயினும் இவர் தனது கடமையை அங்கு பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் – 2017 வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கைக்கு அமைய 2017.06.01 முதல் யாழ்.திருக்குடும்பக் கன்னியர் மடம் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆயினும் – அங்கும் இவர் தனது கடமையைப் பொறுப்பேற்கவில்லை.

இவ்வாறு – கல்வியமைச்சால் வழங்கப்பட்ட இரண்டு இடமாற்றத்தையும் முறையாக பின்பற்றாமல் ஒரே பாடசாலையில் கற்பித்ததன் மூலமே சிரேஸ்ட உத்தியோகத்தர் என்று போலியான காரணம் காட்டி முறைகேடான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பாடசாலையில் அதிபர் ஓய்வுபெறும்போது – 1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால் – இதற்கு மாறாக அரசியல்வாதிகளுக்கு சேவகம் செய்பவர்களுக்கு பாடசாலை அதிபர்களாக நியமனம் வழங்குவதை க் கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான அதிபர்கள் தமக்கு நியமனங்களைப் பெற்றுத்தந்த அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக நடந்துகொண்டு முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே – யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் தலையீடு நீக்கப்பட்டு, 1998/23 சுற்றறிக்கையின் அடிப்படையில் பொருத்தமானவர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்.
இலங்கை ஆசிரியர் சங்கம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More