Home இலங்கை சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை….

சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை….

by admin

புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க மாட்டோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை. மறுபுறம் இருக்கும் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவதிலும் அனைத்து தரப்பினதும் அனுமதி அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி விவாகரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்திலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும்,  குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாமே முன்னின்று செயற்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More