Home இலங்கை பிணை முறி குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை

பிணை முறி குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் போலியானவை என முன்னாள் நிதி அமைச்சா  ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தமக்கோ பிரதமருக்கோ தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான அறிக்கை கைகளில் கிடைக்கும் வரையில் கருத்து வெளியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைiமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை பீதியடையச் செய்து யாரேனும் ஒர் பயணத்தை ஆரம்பிக்க முடியற்சித்தால் அது வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் சேறு பூசல்களினால் உண்மைகளை மறைத்துவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுக்கும் தரப்பினருக்கு வெற்றிலைப் பாக்கு கடையொன்றையேனும் நடத்திச் செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More