Home சினிமா எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது – பாக்யராஜ்

எனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளது – பாக்யராஜ்

by admin


நடிகரும் இயக்குனருமான தனக்குள்ளும் அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டுள்ளதெனவும் விரைவில் நேரடி அரசியலில் பங்கேற்பது குறித்து அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது பிறந்த நாள் விழா அவரது ரசிகர்கள் சார்பில் மதுரையில் நடைபெற்றுள்ள நிலையில் அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., தன் படங்களில் சமூகத்திற்கு தேவையான அரசியல் கருத்துக்களை புகுத்தியதுடன் சகதொழிலாளிகளுக்கும், மக்களுக்கும் நல்லது செய்தார்.

ஆனால் தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More