Home இலங்கை மைத்திரியும் றணிலும் களவெடுக்க மாட்டார்கள்:-

மைத்திரியும் றணிலும் களவெடுக்க மாட்டார்கள்:-

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் தற்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் எனவும், என்றாலும் அமைச்சர்களும் சில அதிகாரிகளும் தவறு செய்தவர்களாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவர்களை ஒன்றாக கொன்று ஒழித்து விட முடியாது எனவும், படிப்படியாகவே தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அதன் முன்னாள் ஆளுநர் உடனே வீட்டுக்கு அனுப்பப்பட்டார் எனவும், நிதி அமைச்சரும் பதிவியிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More