74
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது பாரவூர்தி ஒன்று மோதி விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love