Home இலங்கை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு நிதி உதவி

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகளுக்கு நிதி உதவி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மறுவாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றிவருவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட புனர்வாழ்வுக் கிளைக்குப் பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார்.

‘மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டடுள்ள நிலையில் அந்த உதவித்தொகையை யாழ்.மாவட்டத்தில் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் போராளிகள் இந்த உதவித் தொகைப் பெற முடியும். பணியாற்றும் நிறுவத்தால் அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதித் தொகை செலுத்தப்பட்டிருக்கவேண்டும். இந்த விடயங்கள் பின்பற்றப்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது விவரங்களை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள புனர்வாழ்வுக் கிளையில் பதிவு செய்யவேண்டும்.

தகுதியானவர்களுக்கான 10 ஆயிரம் ரூபா உதவித் தொகை அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்’ என்று புனர்வாழ்வுக் கிளையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More