Home இந்தியா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு

by admin

நடிகர் விஷால் தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதுடன அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் எனவும் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டநிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷால், தான் விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் தான் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திரும்பிய போது, தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது எனவும் அந்த நிமிடமே தான் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் எனவும் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், மக்களில் ஒருவனாக இதை கூறுகிறேன் எனவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர் எனவும் இதனை தன்னால் உணர முடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் சக்திவாய்ந்த தலைவராக யார் வருவார்கள் என கேட்டதற்கு, இருவருமே அவர்களது கொள்கைகளை தெரிவிக்கவில்லை என்பதனால் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More