Home இலங்கை சாமர சம்பத் தஸநாயக்கவிடம் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரினேன் – தமிழ் பாடசாலை அதிபர்…..

சாமர சம்பத் தஸநாயக்கவிடம் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரினேன் – தமிழ் பாடசாலை அதிபர்…..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து தன்னை திட்டியதுடன் அச்சுறுத்தியதாகவும் இதனால் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரியதாகவும் பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மற்றொரு தடவை தன்னை அழைத்து, இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரவில்லை எனவும் ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தனது மகளை அனுமதிப்பதற்காக, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஊவா மாகாண முதலமைச்சரின் கடிதத்துடன் அதிபரைச் சந்திக்க நிலையில் அதிபர் அந்தக் கடிதத்தினை நிராகரித்தமைக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை முதலில் ஊவா மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

எனினும்; இது பொய்க் குற்றச்சாட்டு என்று மறுத்திருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதால் சமந்த வித்யாரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட அதிபர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னிலையில் இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More