Home இலங்கை கரைச்சி பிரதேச சபை செயலாளர் அரசியல் கட்சி பிரதிநிதியாக செயற்படுகின்றார் – வர்த்தகர்கள் குற்றச்சாட்டு

கரைச்சி பிரதேச சபை செயலாளர் அரசியல் கட்சி பிரதிநிதியாக செயற்படுகின்றார் – வர்த்தகர்கள் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி போல் செயற்படுவதாக கிளிநொச்சி வர்ததகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ச்சியாக அவரின் நடவடிக்கைகள் பொதுவாக வர்த்தகர்களின் நலன்களுக்கப்பால் சென்று ஒரு அரசியல் கட்சி சார்பாகவும் அக்கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு சார்பாக காணப்படுவதாகவும், தற்போதைய தேர்தல் காலத்திலும் அவரின் இச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கடந்த காலத்தில் வர்த்தகர்களின் நலன்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கி செயற்பட்டு வந்தார் எனவும் கடந்த தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் கிளிநொச்சி சந்தையின் உட்புறத்திற்குள் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடத்த அனுமதி கோரியபோது வர்த்தகர்களின் சொத்துக்கள், மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக ஏற்படக் கூடாது என்பதை கருதியும் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து இதனை அவர் எழுத்து மூலமே அறிவித்திருந்தார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறே கடந்த வருடம் மே தினக் கூட்டங்களுக்கும் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த கட்சிகள் அமைப்புகள் அனுமதி கோரிய போதும் அதற்கும் பிரதேச சபை செயலாளர் மேற்படி காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்திருந்தார்.

இது வர்த்தகர்களை பொறுத்தவரை பிரதேச சபையின் செயலாளர் வர்த்தகர்களின் பிரதிநிதியாகவும் செயற்படுகின்றார் எனும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் தற்போதைய நிலையில் கிளிநொச்சி பொதுச் சந்தையின் உட்புறத்திற்குள் அரசியல் கட்சி ஒன்றுக்கு தேர்தல் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிந்து அதற்கு வர்த்தகர்களாகிய நாம் ஆட்சேபனையை எழுத்து மூலம் தெரிவித்திருந்தோம்.

அதில் எங்களது வியாபார நிலையங்களின் இலக்கம், பெயர் என்பவற்றை குறிப்பிட்டு 50 க்கு மேற்பட்ட வியாபாரிகள் ஒப்பம் இட்டு கடிதம் அனுப்பியிருந்தோம், அதில் சில வியாபார நிலையங்கள் தந்தை அல்லது கணவனின் பெயரில் காணப்படும். ஆனால் ஒப்பம் இட்டது அவர்களின் பிள்ளைகள் அல்லது மனைவி. இந்த நிலையில் செயலாளர் வியாபார நிலையங்கள் பூட்டப்படுகின்ற மாலை வேளையில் சென்று வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த ஒரு கட்சிக்கு ஆதரவாக ஒப்பம் இட்டவர்களை விசாரணை செய்ததோடு, தந்தையின் பெயரில் உள்ள வியாபார நிலையத்தை நடத்தும் மகளினை எச்சரித்துள்ளார்.

இது பிரதேச சபையின் செயலாளர் குறித்த கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதனை உறுதிப்படுத்துகிறது. இது வர்த்தகர்களாகிய எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே செயலாளா் எங்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டுமே தவிர அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதியாக செயற்படக கூடாது எனவும்ம் நாம் விரும்புகின்றோம் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More