87
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கை வழியமைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின் மூலம் சில பொருட்கள் சேவைகளுக்கு தீர்வையிருக்காது என தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தித் தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கும், சிங்கப்பூரின் வர்த்தக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
Spread the love