Home இலங்கைடக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

by admin

கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா   நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எமது மக்களது காணி, நிலங்களில் பல படையினரிடமிருந்து இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், எமது மக்களுக்குச் சொந்தமான மேலும் காணிகளை படையினரின் பல்வேறு தேவைகளுக்கு என சுவீகரிப்பது நியாயமற்ற செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா மேற்படி காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் இக் காணி அளவீட்டை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More