Home இலங்கை இணைப்பு 2 – ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

இணைப்பு 2 – ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்பய்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய மேலதிக செயலாளர் ஒருவரும், முன்னாள் கணக்காளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் வாகனக் கொள்வனவில் ஈடுபட்ட போது இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர்கள் இருவரையும் எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜபக்ஸ வலயம் மீண்டும் சுற்றி வளைப்பு…

Jan 25, 2018 @ 14:22

முன்னாள் ஜனாதிபதியின் காரியாலயத்தின் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More