குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொள்வர் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது வழமையானது என சுட்டிக்காட்டியுள்ள அவர் எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் இரண்டு தலைவர்களும் இணைந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சியில் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment