Home பிரதான செய்திகள் 19 வயதுக்கு கீழ்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது..

19 வயதுக்கு கீழ்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது..

by admin


19 வயதுக்கு கீழ்ப்ட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய இளையோர் அணி முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி, இந்தியா வெற்றியீட்டியுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இதன்படி இந்தியஅணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷப்மான் கில் 102 ஓட்டங்களையும் பிரித்வி ஷா 41 ஓட்டங்களையும் மஞ்ஜோத் கல்ரா 47 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இதனையடுத்து 273 எனற் வெற்றி இலக்குடள் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி 203 ஓட்ட வித்தியாசத்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஏதிர்வரும் பெப்ரவரி 3-ம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More