Home உலகம் ஆங் சான் சூச்சியின் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஆங் சான் சூச்சியின் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

by admin


மியான்மர் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியின் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யான்குன் நகரில் அமைந்துள்ள மாளிகை மதில்சுவரின் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் இந்தச் சம்பவம் நடைபெற்றபோது சூச்சி அவரது இல்லத்தில் இல்லை எனவும் மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக சூச்சி குரல் கொடுக்க தவறியதால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளான குறித்த மாளிகையில்தான் ஆங் சான் சூச்சி 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More