Home சினிமா பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன்

பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ள ரிஷிவரன்

by admin

மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளது. மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களது மகனான சாய் ரிஷிவரனின் படம் வெளியில் வந்தது இல்லை. இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் தற்போது வெளியாகி பலருத கவனத்தினையும் ஈர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வாறு குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றிருந்தார். நடிப்பில் வல்லவரான ரகுவரனை தெரிந்த எமக்கு அவருக்கு இருந்த இசை ஆர்வம் பற்றி அதிகம் தெரியாது.

இந்நிலையில் ரோகினி ரகுவரன் எழுதிப பாடிய பாடல்களை ஒரு அல்பமாக தயாரித்து வெளியிட்டுள்ளார். அந்த அல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது ரிஷிவரனுடன் ரோகினியுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது எடுத்த புகைப்படமே தற்போது வெளியாகி எல்லோரதும் கவனத்தினை ஈர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More