Home இலங்கை அர்ஜூன் அலோசியஸின் வீடு சுற்றி வளைப்பு?

அர்ஜூன் அலோசியஸின் வீடு சுற்றி வளைப்பு?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் வீடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த இருவரினதும் வீடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருவதாக, குற்றப் புலனலாய்வுப் பிரிவு உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொள்ளுப்பிட்டி இன்னபிளர் வீதியில் அமைந்துள்ள அர்ஜூன் அலோசியஸின் வீடும், வெள்ளத்த்தையில் அமைந்துள்ள கசுன் பலிசேனவின் வீடும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன், அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பேர்பச்சுவல் ஸ்டரஸீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் வீடுகளே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More