Home உலகம்பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகின்ற நாடுகளின் பட்டியலில் மேற்திந்திய தீவுகள்அணியும் இணைந்துள்ளது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகின்ற நாடுகளின் பட்டியலில் மேற்திந்திய தீவுகள்அணியும் இணைந்துள்ளது.

by admin

பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்துகின்ற நாடுகளின் பட்டியலில் மேற்திந்திய தீவுகள்அணியும் இணைந்துள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற நாடுகளே பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்தி வந்தன.

ஐந்து நாட்கள் போட்டி என்பதால் டெஸ்ட் போட்டிற்கான மதிப்பு குறைந்து வருகின்ற நிலையில் பகல்-இரவு ஆட்டமாக நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்தது. அந்தவகையில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் பகல் இரவு டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தின.

இந்தநிலையில் மேற்திந்திய கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. 10 வருடங்க்ள கழித்து இலங்கை அணியும் இந்த பகல் இரவுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேற்திந்திய தீவுகளுக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More