Home இலங்கைபுதிய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராமங்களில் அபிவிருத்தி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராமங்களில் அபிவிருத்தி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by admin

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் புதிய மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்

சுமார் நான்கு தசாப்தங்களின் பின்னர் தொகுதிவாரி முறையில் இடம்பெறும் இந்த புதிய தேர்தல் முறையினால் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்பதுடன், மிகவும் அமைதியான முறையில் இந்த தேர்தலை நடத்த முடிந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

இன்று இடம்பெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பொலன்னறுவை, ஶ்ரீ வித்யாலோக்க விகாரையில் பதிவுசெய்ததன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More