Home இலங்கை புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் – சிவி விக்கினேஸ்வரன்

புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் – சிவி விக்கினேஸ்வரன்

by admin


பிரதேசசபைத் தேர்தல்கள் முடிவுற்று தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. புதிதாகப் பிரதேசசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகக் கூடிய அக்கறை காட்டி தங்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் வவுனியா இந்துக்கல்லூரிவருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இயலக்கூடியளவு பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடவும் அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் விருப்பமுள்ள போதும் சில நேரங்களில் அது தனது சக்திக்கு அப்பாற்பட்ட சில காரணிகளால் இயலாமல் போய்விடுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் பின் நாம் எமது தமிழரெனத் தலை நிமிர்ந்து வாழும் காலம் உதயமாகியுள்ளது. எமது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாட்டின் விளையாட்டு அணிகளில் சேர்க்கப்பட்டு தமது சிறப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள். நாம் யாவரும் எமது சிறப்புக்களை ஊரறிய உலகறிய வெளிக்காட்ட வேண்டிய காலம் இப்பொழுது மலர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More