Home இந்தியா கிராமப்புறப்பாடகனுக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவனுக்கு துணைவேந்தர் பதவி எதற்கு?

கிராமப்புறப்பாடகனுக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவனுக்கு துணைவேந்தர் பதவி எதற்கு?

by admin

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது என கிராமிய பாடகா் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தா் பதவி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக  குற்றம் சாட்டியுள்ள நாட்டுப்புற பாடகா் புஷ்பவனம் குப்புசாமி,

“பல்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்கான அழைப்பாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி குறித்த காலத்தில் நான் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்ப காலம் முடிவடையும் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்படி நான்தான் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டத்திற்கு மாறாக தேவையின்றி விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பிரமிளா குருமூா்த்தியை அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. அதன்படி அவா் விண்ணப்பிக்கவே அவருக்கு துணைவேந்தா் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்தவன் என்பதால் எனக்கு பதவி மறுக்கப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் தனது விண்ணப்பத்தை பரிசீலித்திருப்பார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More