Home இலங்கை வெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை :

வெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை :

by admin

தற்போது நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, வெளியில் தெரிவிக்கின்ற அளவுக்கு நெருக்கடி நிலமை இல்லை எனவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்போவில்லை எனவும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இயங்கும் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More