குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதி அமைச்சுப் பொறுப்பினை பிரதமர் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றிற்கு ஒர் சட்டமூலமொன்றை சமர்ப்பித்து அதன் மூலம் பாராளுமன்றினதும், நிதி அமைச்சினதும் பொறுப்பினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாம் பொறுப்பேற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் சட்ட மூலமொன்று அறிமுகம் செய்யப்பட்டால் அதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி உத்தியோகபூர்வமாக கோரிக்கை முன்வைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment